8 மாதங்களுக்கு பின் இன்று கல்லூரிகள் திறப்பு: உற்சாகமான மாணவர்கள்!

திங்கள், 7 டிசம்பர் 2020 (07:55 IST)
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன
 
8 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும் இன்று திறக்கப்பட உள்ளதை அடுத்து மாணவர்கள் உற்சாகமாக உள்ளனர். இன்று முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும் என்றும் மாணவர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
மேலும் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி வர வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்றும் மாணவர்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி ஹாஸ்டலில் ஒரு அறையில் ஒருவர் மட்டுமே தங்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் தொடங்க இருப்பதால் மாணவர்கள் உற்சாகமாகி இன்று கல்லூரிக்கு செல்ல தயாராகி வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்