முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாளிகளின் ரூ.110 கோடி சொத்துக்கள் முடக்கம்!

செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (08:10 IST)
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வருமானவரித் துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக ரெய்டு செய்தனர் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூட்டாளிகள் 2 பேருக்கு சொந்தமான ரூபாய் 110 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
லஞ்ச ஒழிப்பு துறை கோரிக்கையை ஏற்று 110 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு தொகையை முடக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் கூட்டாளிகளுக்கு சொந்தமான 110 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டன என வெளிவந்திருக்கும் செய்தி அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்