தேர்தலில் தந்தை வெற்றி... மகிழ்ச்சியில் உயிரிழந்த மகன் !

வியாழன், 2 ஜனவரி 2020 (19:56 IST)
தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 91975 பணிகளை நிரப்புவதற்காக கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 76.19 % வாக்குகள் பதிவானது. அதையடுத்து டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் உள்ளாட்சி தேர்தலில் 77.73 வாக்குகள் பதிவானது.   இன்று பல்வேறு குழப்பங்களுக்கு இடையே வாக்குகள் எண்ணப்பட்டு  வருகிறது. இந்த நிலையில் தேர்தலில் தந்தை வெற்றி பெற்றதை அறிந்த மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி மாவட்டம் கவுன்சிலருக்கான மொத்தமுள்ள 515 இடங்களில் அதிமுக 154 இடங்களிலும், திமுக 142 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் மொத்தமுள்ள 5067 இடங்களில் அதிமுக 586 இடங்களும்,  திமுக 579 இடங்களும் வெற்றி பெற்றுள்ளது.
 
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட தந்தை வெற்றிப் பெற்றதை அறிந்த மகன்  உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதாவது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட தந்தை  வெற்றிப் பெற்றதை கேட்டு அறிந்த மகிழ்ச்சியில் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்