அடுத்த பிரதமராக வருவதற்கு தகுதியானவர் எடப்பாடி தான்; பொன்னையன் பேட்டி..!

திங்கள், 12 ஜூன் 2023 (12:50 IST)
அடுத்த பிரதமராக வருவதற்கு தமிழகத்திலிருந்து தகுதியானவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். 
 
நேற்று தமிழகத்திற்கு வந்த அமித்ஷா ’தமிழகம் இரண்டு பிரதமர்களை தவற விட்டுவிட்டது என்றும் காமராஜர் மற்றும் மூப்பனார் ஆகிய இருவரும் பிரதமராக இருக்க வேண்டியவர்கள் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் வருங்காலத்தில் தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறினார். இதனை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தமிழகத்திலிருந்து பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டால் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் தமிழிசை சௌந்தரராஜன் அல்லது எல். முருகனை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யலாம் என்றும் பரிந்துரை செய்தார். 
 
இந்த நிலையில்  ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக வருவதற்கு தகுதியானவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான் என்றும் உலக அரசியலை இந்திய அரசியலை தெரிந்தவர் மற்றும் விரல் நுனியில் புள்ளி விவரங்களை வைத்திருப்பவர் அவர் தான் என்றும் கூறினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்