எடப்பாடியின் ஜாதகம் ஓஹோனு இருக்காம்... ஆட்சி கவிழாமல் இருக்க இதுதான் காரணமோ?

வியாழன், 4 ஜூலை 2019 (09:32 IST)
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜாதகம் நன்றாக இருப்பதால்தான் ஆட்சியில் இருக்கிறோம் என திமுகவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். 
 
தமிழக சட்டசபை கூடி வரும் நிலையில், நேற்று சட்டசபையில் திமுக அதிமுகவினரிடையே இடையே யாருடைய ஜாதகம் சிறப்பாக உள்ளது என விவாதம் நடைபெற்றது. சட்டசபையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தனது உரையை முடித்தவுடன் குட்டி கதை ஒன்றை சொன்னார். இந்த கதைக்கு பின்னர்தான் இந்த விவாதம் துவங்கியது. 
 
திருமணம் குறித்து ஒரு கதையை சொன்ன செல்லூர் ராஜூ கடைசியாக இந்த கதையை போலதான் சிலரின் எண்ணமும் ஒருபோதும் பலிக்காமல் பகல் கனவாக முடியும் என தெரிவித்தார். உடனே திமுகவினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவினருக்குத்தான் சாமி பக்தியும் இல்லை, ஜாதகத்தில் நம்பிக்கையும் கிடையாது, ஆனால் எங்களுக்கு சாமி பக்தியும் ஜாதகத்தில் நம்பிக்கையும் உள்ளதால் எந்த பிரச்சனையும் வராது என தெரிவித்தார்.
 
அப்போது துரைமுருகன், ஜாதகம் உங்களுக்குதான் பார்த்தோம் என கூற, உடனே எடப்பாடி பழனிச்சாமி எங்கள் ஜாதகம் சரியாக இருப்பதால்தான் தாங்கள் ஆட்சியில் இருக்கிறோம், ஜாதகம் சரியாக இல்லாததால்தான் நீங்கள் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் நடுவில் தொங்கி கொண்டிருக்கிறீர்கள் என பதிலடி கொடுத்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்