இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு காவல்துறையின் தோல்வியே காரணம்: எடப்பாடி பழனிசாமி

புதன், 13 செப்டம்பர் 2023 (12:40 IST)
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு காவல்துறையின் தோல்வியே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். 
 
ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடிக்லி முழுக்க முழுக்க காவல்துறையின் தோல்வியே காரணம் என்றும் உண்மை தகவல்களை முன்கூட்டியே கவனிக்க முடியாமல் காவல்துறை திணறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
போதைப்பொருள், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என பல குற்றங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டிலே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்தை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்