செல்போனில் புக் செய்தால் வீடு தேடி வரும் டீசல்: புதிய முறை அமல்

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (08:17 IST)
செல்போனில் புக் செய்தால் வீடு தேடி வரும் டீசல்: புதிய முறை அமல்
செல்போனில் புக் செய்தால் வீடு தேடி வந்து டீசல் கொடுக்கும் முறை அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நுகர்வோர்கள் பெரும் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
முதல்கட்டமாக இந்த வசதி அம்பத்தூர் பகுதியில் தொடங்கப்பட்டு உள்ளது என பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி செல்போனில் புக் செய்தால் உடனடியாக அவர்களுக்கு தேவையான அளவுக்கு டீசலை அவர்களுடைய இருப்பிடத்திற்கே சென்று வினியோகம் செய்யும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் தொடங்கியுள்ளது
 
அவசர தேவை கருதி இந்த சேவை தொடங்கப்பட்டு உள்ளதாகவும் படிப்படியாக இந்த சேவை அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. உணவு பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை பல்வேறு பொருட்கள் தற்போது நுகர்வோர்களின் வீடுகளுக்கே தேடிச்சென்று டெலிவரி செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த வரிசையில் தற்போது டீசலும் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்