திமுகவை சேர்ந்த தா.கிருஷ்ணன், ஆலடி அருணா, கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் ஆகியோர் நடைப்பயிற்சி செய்யும் போது தான் படுகொலை செய்யப்பட்டனர். இதில் ராமஜெயத்தை படுகொலை செய்தது யார் என்பது பல ஆண்டுகளாகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது, விழுப்புரம் மாவட்ட திமுக நகர செயலாளராக இருக்கும் செல்வராஜ் இன்று அதிகாலை விழுப்புரத்தில், ஆள் நடமாட்டம் குறைவான ரயில்வே பழைய குடியிருப்புப் பகுதியில், நடைப்பயிற்சி சென்றபோது, இருக்கசக்கர வாகனத்தில் அறிவாளுடன் வந்த ஆறு மர்ம நபர்கள் அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.