சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயன்ற போதை ஆசாமி கைது!

J.Durai

சனி, 10 ஆகஸ்ட் 2024 (10:02 IST)
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 5 வயது மற்றும் 2 வயது சிறுமிகளை நிலக்கோட்டையில் ஒரு ஓட்டலில் சப்ளையராக பணியாற்றும் அந்தோணி தாஸ் வயது 45. மது போதையில் சிறுமிகளுக்கு
மிட்டாய் வாங்கி கொடுத்து ஆசை வார்த்தை கூறி இரண்டு சிறுமிகளிடம் தவறுதலாக நடக்க முயற்சி செய்து உள்ளார். 
 
அப்போது சிறுமிகளின் அழுகை சத்தம் கேட்டு அந்த சிறுமிகளின் தாயார் ஓடோடி வந்து அந்தோணி தாசிலிடமிருந்து சிறுமிகளை மீட்டுள்ளார்.
 
இதன்பின்னர் சிறுமிகளின் தாயார் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லதாவிடம் கொடுத்த புகாரின் படி அந்தோணி தாஸ் மீது வழக்கு பதிவு செய்து  கைது செய்து திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆட்சி செய்து சிறையில் அடைத்தனர்.
 
சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்