மேலும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை எடப்பாடி அணிக்கு ஓபிஎஸ் அணியை இணைக்க கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும், அதன் பின்னர் தான் அதிரடியை தொடங்க உள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து தினகரனுக்கு இதுவரை 37 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.
ஏற்கனவே தினகரன் பக்கம் 37 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் மேற்கொண்டு 15 எம்எல்ஏக்கள் தினகரன் பக்கம் வர தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தன் பக்கம் உள்ள 50-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் மூலம் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து முதற்கட்டமாக கட்சியை கைப்பற்றும் முயற்சியில் தினகரன் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.