ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உட்படப் பல சாட்டிங் மற்றும் சமூக வலைதளங்கள் இருந்தாலும், அவை செயல்படுவதற்கு இன்டர்நெட் கட்டாயம் தேவைப்படுகிறது. இந்த நிலையில், இன்டர்நெட் இல்லாமல் தகவல்களை பகிர முடியும் என்ற வகையில் ஒரு செயலியை, ட்விட்டர் வலைதளத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி அறிமுகம் செய்துள்ளார். இதனால், இனிமேல் இன்டர்நெட் இல்லாமலேயே சாட் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.