உருவாகிறதா குறைந்த காற்றழுத்த தாழ்வுத் பகுதி?

சனி, 30 ஏப்ரல் 2022 (13:27 IST)
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல், அதை சார்ந்த பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுத் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. எனினும் வெப்பசலனம் காரணமாக சில மாவட்டங்களில் மிதமான மழையும் அவ்வபோது பெய்து வருகிறது.
 
தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஏப்ரல் 29, 30 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளிலும், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாக்குமரி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் லெசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல், அதை சார்ந்த பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுத் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதால் மே 4, 5-ல் அந்தமான் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்