தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

திங்கள், 13 டிசம்பர் 2021 (22:57 IST)
தமிழகத்தில் ஊரடங்கை வரும் டிசம்பர் 31 ஆம்  தேதி  வரை நீட்டித்து  தமிழக  அரசு
உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு லிலி நாடுகள்:இல் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும்  பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் கொரோனா ஊரடங்கு  15 தேதி வரை உள்ள நிலையில், தமிழ்நாட்டில்  ஊரடங்கை நீடித்து தமிழக  அரசு  அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில், பொதுமக்கள் கூடும்  இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 31-12-2021 மற்றும் தேதிகளில் புத்தாண்டு   நியூ-இயர்   கொண்டாட்டங்ளுக்கும் ,அனைத்து கடற்கரைகளுக்கும் மக்கள் செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் அனைத்து  நீச்சல் குளங்களும் ஏசெயல்பட அனுமதி எனவும், 3-01-2022  உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறையில் செயல்படும் என தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்