கடைசி நேரத்தில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு: ஈரோடு தேர்தல் குறித்து சிபிஎம்

வியாழன், 16 பிப்ரவரி 2023 (14:58 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடைசி நேரத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு இருப்பதாக சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தேகம் தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தல்லுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு பாஜக ஆதரவு கொடுத்துள்ளது என்பதன் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் கடைசி நேரத்தில் தில்லுமுல்லு செய்து அதிமுகவை வெற்றி பெற வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது என சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 
ஆனால் இன்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் கூறிய போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நேர்மையாக நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்