மாணவியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நேற்று அந்த மாணவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த அந்த மாணவி, தான் விரும்பி தான் விமல் ராஜுடன் சென்றதாகவும் தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
போஸ்கோ சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை செய்யத் தூண்டும் அளவிலான காட்சிகளை, திரைப்படங்களில் இடம்பெற தணிக்கைத் துறையினர் எவ்வாறு அனுமதிக்கின்றனர் என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் இது தொடர்பாக நேரில் ஆஜராகி பதிலளிக்க தணிக்கைத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியும் உத்தரவிட்டனர்.