நடிகை விஜயலட்சுமி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Sinoj

செவ்வாய், 5 மார்ச் 2024 (19:35 IST)
நடிகை விஜயலட்சுமி  வரும் மார்ச் 19 ஆம் தேதி  ஆஜராக வேண்டும் என்று சென்னை  உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  உத்தரவிட்டுள்ளார்.
 
தமிழ் சினிமாவில் பிரெண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கிரன்  உள்ளிட்ட பல படங்களில்  நடித்தவர் விஜயலட்சுமி. இவர்  கடந்த 2011 ஆம் ஆண்டு சீமானுக்கு  எதிராக சென்னை, வளசர வாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
 
இப்புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை ரத்து  செய்ய கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்திருந்த  நிலையில், இவ்வழக்கு தொடர்பாக   நடிகை விஜயலட்சுமி  வரும் மார்ச் 19 ஆம் தேதி  ஆஜராக வேண்டும் என்று சென்னை  உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  உத்தரவிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்