முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து

வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (22:08 IST)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது
 
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவருடைய மகள், மருமகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர் 
 
இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில்  ஜெயக்குமார், அவருடைய மகள் மற்றும் மருமகன் ஆகியோர் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து நீதிபதி இன்று உத்தரவிட்டார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்