தமிழகத்தில் குறையும் கொரோனா தொற்று..

புதன், 2 ஜூன் 2021 (15:59 IST)
தமிழகத்தில்  கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டாவது நாளாக  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது.  

தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துவருகின்றது.

சினிமா நட்சத்திரங்கள், மற்றும் பிரபலங்கள் அரசுடன் இணைந்து மக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது முழு ஊடங்கு உள்ளதால் கொரொனா தாக்கம் குறைந்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது: கொரொனா பாதிப்பு குறைந்து வருவதால் இதன் பாதிப்பிலிருந்து மீண்டு விடுவோம் என மக்கள் நம்புகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.  மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோன இல்லை என்ற நிலை உருவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்