10-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகை!

சனி, 8 மே 2021 (13:38 IST)
கொரோனா கால நிவாரணம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 4000 வழங்க திமுக வாக்குறுதி அளித்திருந்த நிலையில் ரூ 4 ஆயிரத்தில் முதல் தவணையாக ரூ 2000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
அதன்படி கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்பட்டு கொடுக்கப்படவுள்ளனர்.    
 
ரேஷன் கடைகள் ஊரடங்கு காலத்தில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்