தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது…. இன்று 6,988 பேருக்கு கொரோனா !

சனி, 25 ஜூலை 2020 (18:07 IST)
தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 6,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 6,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 89 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும்  1329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை 92,206 லிருந்து 93,537 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 7758 பேர் இன்று குணமடைந்துள்ளனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்