சென்னையில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை

வியாழன், 18 நவம்பர் 2021 (07:20 IST)
சென்னையில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அறிவிக்கப்பட்டுள்ளது
 
1913 என்ற எண்ணுக்கு வெள்ளம் மற்றும் கனமழை சேதம் குறித்து தகவல் அளித்தால் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த கட்டுப்பாட்டு அறையில் மொத்தம் 50 இணைப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் 24 மணிநேரமும் ஊழியர்கள் இதில் சேவை செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் சமூக வலைதளங்கள் மூலம் சென்னை மாநகராட்சி டுவிட்டர் பக்கத்தை டேக் செய்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று மீட்புப் பணிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
எனவே சென்னை மக்கள் வெள்ள சேதம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றால் உடனடியாக சமூக வலைதளங்கள் மூலமாக அல்லது 198 என்ற எண் மூலமும் தெரிவிக்கலாம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்