தேளை கொல்லும் விஷம் படைத்த கோக்: அதிர்ச்சி வீடியோ!!

வெள்ளி, 27 ஜனவரி 2017 (10:17 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அறவழியில் போராடினர். இந்த போராட்டத்தின் போது பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு பானங்களை தடை செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.


 
 
இந்நிலையில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு வணிகர் சங்கம் பெப்சி, கோக் போன்றவற்றை விற்பனை செய்ய மாட்டோம் என கூறியது. 
 
இதனை அடுத்து வரும் மார்ச் 1 முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
 
இந்த நடவடிக்கைக்கு பலம் சேர்க்கும் விதமாக கோக்கின்வின் விஷத்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.
 
அதில், அதிக விஷம் கொண்ட தேளைக் கூட கொல்லும் அளவிற்கு கொடிய விஷம் கொண்டுள்ளதை வீடியோ நிரூபிக்கின்றது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்