தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

வெள்ளி, 13 ஜனவரி 2023 (18:00 IST)
தமிழகத்தில் அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
இன்று சட்டசபையில் இது குறித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த 20 மாதத்தில் ஏராளமான புதிய தொழில்கள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் 27 தொழில் நிறுவனங்கள் புதிதாக தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி உள்ளன என்றும் தெரிவித்தார்.
 
மேலும் வாரம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலகம் முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் நடத்தப்படும் என்றும் 100க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்கும் என்றும் இந்த மாநாடு சென்னையில் பிரமாண்டமாக நடத்தப்படும் என்றும் கூறினார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்