மீனவர் வீட்டில் தேநீர் அருந்திய முதலமைச்சர் ஸ்டாலின்.. கனிமொழிக்கு வாக்கு சேகரிப்பு..!

Mahendran

செவ்வாய், 26 மார்ச் 2024 (12:46 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் இன்று அவர் தூத்துக்குடியில் கனிமொழிக்காக காலை முதல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தூத்துக்குடியில் வாக்கு சேகரிப்பின் போது மீனவர் வீட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் அருந்தினார். தூத்துக்குடி லையன்ஸ் ஸ்டோன் பகுதியில் நடந்து வீதி வீதியாக சென்று தமிழக முதல்வர் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வந்தார்.
 
அப்போது வாக்கு சேகரிப்பின்-போது லயன்ஸ்டோன் பகுதியில் உள்ள சூசை தப்பாஸ் என்ற மீனவர் வீட்டிற்கு சென்று முதல்வர் வாக்கு சேகரித்து அந்த மீனவர் வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தினார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இன்று காலை முதல் முக ஸ்டாலின் தூத்துக்குடி தொகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டு மீனவர்கள், காய்கறி வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட அனைவரிடமும் கருத்துக்களை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். மேலும்

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்