பொங்கல் பரிசு 1000 ரூபாய்! – முதல்வர் அறிவிப்பு!

செவ்வாய், 26 நவம்பர் 2019 (13:09 IST)
பொங்கலுக்கு தமிழக மக்களுக்கு 1000 ரூபாய் செலவுக்காக வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கள்ளகுறிச்சி தனி மாவட்டமாக தொடங்குவதையொட்டி நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் விதத்தில் அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பையும், 1000 ரூபாய் பணமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ரேசன் அட்டைகளுக்கு வழங்கப்படும் இந்த பொங்கல் பை மற்றும் பணம் ஜனவரி மாதத்தில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்