அரிசி அட்டையாக மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு..

Arun Prasath

செவ்வாய், 26 நவம்பர் 2019 (12:14 IST)
சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டையாக மாற்ற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுகளில் பச்சை அட்டை உள்ளவர்கள் ரேஷன் கடையில் அனைத்து பொருட்களையும் வாங்கலாம். வெள்ளை அட்டை வைத்திருப்பவர்கள் சர்க்கரை மற்றுமே பெற்றுவந்தனர்.

சமீபத்தில் சக்கரை அட்டை வைத்திருப்பவர்கள் அரிசி அட்டயாக மாற்றலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன் கால அவகாசம் நவம்பர் 26 வரை கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சக்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற   கால அவகாசம் நவம்பர் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்