முதலமைச்சரின் தாயார் மரணம்

வெள்ளி, 23 நவம்பர் 2018 (11:39 IST)
புதுவை முதலமைச்சர் நாராயணசாமியின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார்.
புதுச்சேரி முதலமைச்சரின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு 96 வயது ஆகிறது. அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
 
இந்நிலையில் நாராயணசாமி கஜா புயல் நிவாரணம் குறித்து பிரதமர் மோடியை சந்திக்க டெல்லிக்கு சென்றிருந்தார். அவருக்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து தனது பயணத்தை ரத்து செய்து அவர் பாண்டி திரும்பினார். அவரது சொந்த ஊரான பூரணாங்குப்பத்தில்  இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்