சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்: முக்கிய அறிவிப்பு!

வெள்ளி, 16 டிசம்பர் 2022 (15:48 IST)
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அதை சரிக்கட்டும் வகையில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார் 
 
அதேபோல் மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் கடந்த 9ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய நாளை பள்ளிகள் வேலைநாலாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னை திருவள்ளூரை அடுத்த வேறு சில மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு வேலைநாள் என அறிவிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்