21 ஆண்டுகளாக ஜெயலலிதா கட்டி காத்ததை ஒரே ஆண்டில் காலி செய்த அதிமுக!!

வெள்ளி, 21 ஜூலை 2017 (21:03 IST)
சென்னைக்கு மேலும் பெருமை சேர்த்த சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது புனேவுக்கு இடம் மாறியுள்ளது. இந்த தொடர் தெற்கு ஆசிய நாட்டில் நடைபெறும் ஒரே ஏடிபி டென்னிஸ் போட்டியாகும்.


 

 
இந்த டென்னிஸ் போட்டியை சென்னையில் நடத்த முயற்சிகளை மேற்கொண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்த போட்டிக்கள் தொடர்ந்து நடைபெறவும் ஆதரவு அளித்து வந்தார். 
 
திமுக ஆட்சியிலும் இந்த உதவிகள் தொடர்ந்தன. ஆனால் தற்போது, ஆளும் கட்சி இந்த பெருமையை தக்க வைப்பதில் தோற்றுவிட்டனர்.
 
வருமான பிரச்சினைகளை காரணம் காட்டி இடத்தை மாற்றுவதாக டென்னிஸ் அமைப்பு கூறியுள்ளது. எம்எல்ஏ-களின் வருமானத்தை கூட்ட முயற்சித்த அரசு இதனை முயற்சிக்காதது ஏன். இதுதான் அவர்கள் அம்மாவின் வழிநின்று நடத்தும் ஆட்சியா?

வெப்துனியாவைப் படிக்கவும்