பார்ட் டைமாக கஞ்சா விற்ற சென்னை ஐடி ஊழியர்.. போலீசார் அதிர்ச்சி..!

வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (17:30 IST)
சென்னை சேர்ந்த ஐடி ஊழியர் பார்ட் டைம் ஆக கஞ்சா விற்பனை செய்த நிலையில் போலீசார்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
சென்னை பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் செய்தி ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் கைதானவர்களில் 27 வயது விஷ்ணு என்பவர் சென்னை ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக முதல் கட்ட விசாரணையில் தெரிந்தது. ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே பகுதி நேர வேலையாக கஞ்சா விற்று உள்ளார் என்றும் அவரிடமிருந்து மற்றும் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது 
 
மேலும் கஞ்சா விற்று வந்த 21 வயது அஜய் மற்றும் 28 வயது செல்வம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐடி ஊழியர் கஞ்சா விற்பனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்