சென்னையில் படிப்படியாக நிரம்பும் கொரோனா வார்டு: தேர்தலுக்கு பின் லாக்டவுனா?

ஞாயிறு, 21 மார்ச் 2021 (20:31 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள முக்கிய மருத்துவமனையில் இருக்கைகள் மிக வேகமாக நிரம்பி வருவதால் வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
மார்ச் 1ம் தேதி முதல் மீண்டும் சென்னையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் நேற்றும் இன்றும் 400 பேர்களுக்கும் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தாண்டி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சென்னை கிண்டியில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் 460 நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த இரு மருத்துவமனைகளிலும் இன்னும் ஒரு சில பகுதிகள் மட்டுமே காலியாக இருப்பதாகவும் வெளிவந்திருக்கும் செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மேலும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் லாக்டவுனுக்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்