லைசென்ஸ் இல்லாவிடில் இன்சூரன்ஸ் வழங்கக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதன், 24 ஆகஸ்ட் 2022 (18:33 IST)
லைசென்ஸ் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக்கூடாது என சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 
 
இன்ஷ்யூரன்ஸ் எடுப்பதற்கு லைசன்ஸ் கட்டாயம் தேவை இல்லை என்ற விதிமுறை இதுவரை இல்லாமல் இருந்த நிலையில் இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யும் போது வாகன உரிமையாளருக்கு ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா என ஆராய வேண்டும் என்றும் ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்சு வழங்கக்கூடாது என்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இதனையடுத்து இனி லைசென்ஸ் இல்லாதவர்கள் இன்சூரன்ஸ் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்