சென்னையில் ஒரே மாதத்தில் 10 மடங்கு கூடிய கொரோனா: மாநகராட்சி ஆணையர் தகவல்

வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (17:24 IST)
சென்னையில் கடந்த ஒரே மாதத்தில் 10 மடங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார் 
 
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். நேற்று 1500க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் சென்னை மாநகராட்சி ஊழியர்களால் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் சென்னையில் கடந்த ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பு பத்து மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவ முகாம்களை அதிகரிக்க உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்