தீபாவளியன்று இறைச்சி கடைகள் இயங்க அனுமதி! – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (08:18 IST)
தீபாவளி அன்று சென்னையில் இறைச்சி விற்பதற்கு விதிக்கப்பட்ட தடை திரும்ப பெறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் மக்கள் தீபாவளி அன்று அசைவம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தீபாவளி அன்றே மகாவீரர் ஜெயந்தியும் வரும் நிலையில் சென்னையில் இறைச்சி கடைகள் இயக்க தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து தடையை நீக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் வைத்த கோரிக்கையை ஏற்று இறைச்சி விற்பனை மீதான தடை திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் ஜைனர்கள் குடியிருப்பு பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்