ரசாயனங்களை பயன்படுத்திய 12ஆம் வகுப்பு மாணவன்.. வீடு இடிந்ததால் பரிதாப பலி..!

Mahendran

வியாழன், 21 மார்ச் 2024 (18:31 IST)
சென்னையில் ரசாயனங்களை பயன்படுத்தி 12ஆம் வகுப்பு மாணவன் சோதனை செய்து கொண்டிருந்தபோது திடீரென ரசாயம் வெடித்து வீடு இடிந்ததால் அந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது 
 
சென்னை கொளத்தூர் பகுதியில் ரசாயனங்களை பயன்படுத்தி 12ஆம் வகுப்பு மாணவன் தன்னுடைய வீட்டில் சோதனை செய்து கொண்டிருந்தார். இந்த சோதனையின் போது 7க்கும் மேற்பட்ட ரசாயனங்களை அந்த மாணவன் பயன்படுத்தியதால் வேதியல் விளைவு ஏற்பட்ட திடீரென வெடித்ததாகவும் இதன் காரணமாக அந்த மாணவனின் வீடு மட்டும் இன்றி அருகில் உள்ள மூன்று வீடுகள் சேதம் அடைந்து இடிந்து விழுந்ததாகவும் தெரிகிறது 

இந்த விபத்தில் மாணவன் ஆதித்ய பிரணவ் என்பவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 12ஆம் வகுப்பு மாணவன் செய்த ரசாயன சோதனை காரணமாக ஒரு உயிர் பலியாகியது மட்டுமின்றி மூன்று வீடுகள் சேதம் அடைந்த சம்பவம் கொளத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்