அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

செவ்வாய், 27 டிசம்பர் 2022 (20:46 IST)
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்  15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு காரணமாக இந்த மழை பெய்து வருவதாக வானிலலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.

ALSO READ: டிசம்பர் 29ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை: வானிலை அறிவிப்பு!

இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், திருச்சி, கோவை  உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

Edited By Sinoj
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்