பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு!

Mahendran

சனி, 9 மார்ச் 2024 (17:53 IST)
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் என்பவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் சிபிசிஐடி போலீசார் அவரை தேடி வருகின்றனர் என்று கூறப்படுகிறது 
 
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த பிறகும் முன்னாள் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை ஏன் கைது செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது 
 
இதனை அடுத்து அவரை கைது செய்வதற்காக கேளம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது அவர் வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் தலைமறைவாக இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
 
இதுகுறித்த விசாரணையில் தற்போது அவர் ஒரிசாவில் பதுங்கி இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அவரை கைது செய்ய சிபிசிஐடி போலிசார் ஒடிசா செல்லவுள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்