போக்சோ வழக்கில் கல்கத்தா ஐகோர்ட் பரபரப்பு கருத்து

வெள்ளி, 20 அக்டோபர் 2023 (18:14 IST)
போக்சோ வழக்கில் கல்கத்தா ஐகோர்ட் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது.

மைனர் சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்ட மைனர் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை எதிர்த்து, அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த  நிலையில், இந்த வழக்கில் இருந்து மைனர் இளைஞரை விடுதலை செய்த நீதிமன்றம் ‘’16-18 வயதினர் இடையே பரஸ்பர பாலியல்  உறவு குற்றமற்றதாக்க வேண்டும். இளம் பருவத்தினர் இடையே பாலியல் உறவு இயல்பானது. ஆனால், அதன் தூண்டுதல் என்பது தனி நபர் செயலே. ஆணோ, பெண்ணோ பாலியல் தூண்டுதல்களை கட்டுப்படுத்த வேண்டும் எதிர் பாலினத்தவரின் கண்ணியம், உடலுக்கு மதிப்பளிக்க வேண்டும் ‘’என்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்