இந்த சிஸ்டத்தை வைத்துதானே ரஜினி சம்பாதித்தார் - சி.வி.சண்முகம் அதிரடி

சனி, 27 மே 2017 (15:01 IST)
ரஜினிகாந்தின் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்று ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகிறது. 


 

 
கடந்த 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி “ தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை. நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக  இருங்கள்” என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார். எனவே, அவர் அரசியலுக்கு வருவது நிச்சயம் என அவரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் “இந்த சிஸ்டத்தை வைத்துதானே ரஜினிகாந்த் தமிழகத்தில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தார்” என கருத்து தெரிவித்தார்.
 
ரஜினிகாந்த கூறியது தமிழக அரசியல் பற்றி. ஆனால், சி.வி.சண்முகம் சம்பந்தம் இல்லாமல் உளறுகிறார் என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.

 

வெப்துனியாவைப் படிக்கவும்