தொழிலில் நஷ்டம் : மாடியில் இருந்து கீழே குதித்த தொழிலதிபர் ! பரவலாகும் வீடியோ

வெள்ளி, 4 அக்டோபர் 2019 (18:44 IST)
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு தொழில் கடும் நஷ்டம் ஏற்பட்டதால், 5 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த  வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் பரவலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் ஹோட்டல் மகாராஜா என்ற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த 25 ஆம் தேதி அன்று தொழிலதிபர் பியூஸ் பச்சிகர் தங்கியிருந்தார்.
 
அப்போது, 5 வது மாடியில் தங்கியிருந்த பியூஸ் பச்சிகர், அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். கீழே நின்றிருந்த மக்கள் அவரை குதிக்க வேண்டாம் என உரக்க கத்தினர். ஆனால் அதைக் கேட்டாத பியூஸ் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

 
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவலாகி உள்ளது. 
 
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர், காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

Businessman in Modi's Gujarat (surat) comitting suicide. Because.
Baddu maja ma chhe.
That bloody genocidal maniac. pic.twitter.com/NgY7blWdra

— AAA (@arifsazmi) September 26, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்