மின்சாரம் தாக்கி தம்பி பலி.. இறுதி சடங்கில் அக்காவும் ஷாக் அடித்து பலி! - திருவாரூரில் சோகம்!

Prasanth Karthick

செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (09:23 IST)

திருவாரூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர் உடல் வைத்திருந்த ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் தாக்கி அவரது சகோதரியும் பலியாகியுள்ளார்.

 

 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் மின்சாரம் தாக்கியதில் பலியானார். அதை தொடர்ந்து அவரது உடல் இறுதி சடங்கிற்காக ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்தது.

 

அவருக்கு இறுதி சடங்கு செய்ய அவரது அக்காள் சுந்தரி என்பவர் உள்பட பல உறவினர்கள் வலங்கைமான் சென்றிருந்தனர். அங்கு குருமூர்த்தி உடல் வைக்கப்பட்டிருந்த ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் சுந்தரி உள்ளிட்ட 7 பேர் மின்சாரத்தால் தாக்கப்பட்டனர்.

 

இதில் சுந்தரி உயிரிழந்த நிலையில், மற்ற 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தம்பி மின்சாரம் தாக்கி இறந்த நிலையில், இறுதி சடங்கில் அக்காவும் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்