குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் எப்போது? சுதந்திர தினத்தில் முக்கிய அறிவிப்பு!

புதன், 4 ஆகஸ்ட் 2021 (15:06 IST)
தமிழக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் கவனத்தை ஈர்த்தது குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படுவது.

நடந்து முடிந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் கவனம் ஈர்த்தது குடும்பத்தலைவிகளுக்கான 1000 ரூபாய் அளிக்கும் திட்டம். இந்நிலையில் திமுக வெற்றி பெற்று இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் 1000 ரூபாய் அளிப்பதற்கான அறிவிப்பு எப்போது வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த புதிய திட்ட அறிவிப்பால் புதிதாக ரேஷன் கார்ட்கள் விண்ணப்பிக்கும் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஒன்றாக இருந்த கார்ட்களையும் பிரித்து தனித்தனி கார்ட்களாக பிரிக்கும் விண்ணப்பங்களும் அதிகமாகியுள்ளதாம்.

இந்நிலையில் இந்த திட்டம் குறித்து முக்கியமான அறிவிப்பு வரும் சுதந்திர தினத்தன்று தமிழக அரசால் அறிவிக்கப்படும் என முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்