விஜயகுமார் செல்வியை திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்பட்டு செல்வியின் தந்தையிடம் பெண் கேட்டுள்ளார். செல்வியின் தந்தை படிக்கிற பெண்ணை திருமணம் செய்து தர முடியாது, இந்த வயதில் எல்லாம் காதல் தேவையா என்று திட்டி பெண் கொடுக்க மறுத்துள்ளார்.
பள்ளி முடித்து வீட்டுக்கு வந்த செல்வி, விஜயகுமார் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தார். மருத்துவமனையில் அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்று எண்ணி செல்வி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.