தலைமைச் செயலகத்தில் பரபரப்பு – மோப்ப நாய்கள் வைத்து வெடிகுண்டு சோதனை !

வியாழன், 19 டிசம்பர் 2019 (14:02 IST)
தலைமைச் செயலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதை அடுத்து இன்று காலை வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் அதிகரித்துள்ளது. அசாமில் முதல்வர் வீடு தாக்கப்பட்டதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வந்த சென்னை காவல் கட்டுப்பாட்டு ஆணையத்துகு வந்த தொலைபேசி அழைப்பில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் சென்னையில் உள்ள முதல்வர், துணை முதல்வர் வீடுகளில் சோதனை நடத்தினர். அதையடுத்து இன்று காலை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுனர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அழைப்பு கோவையில் இருந்து வந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்