இந்துப் பெண்ணிடம் பேசிய முஸ்லிம் மாணவன் மீது தாக்குதல்

வியாழன், 19 ஜனவரி 2023 (22:50 IST)
மத்திய பிரதேசத்தில்  ஒரு இஸ்லாமிய மாணவர் இந்துப் பெண்ணிடம் பேசியதற்காக  தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இந்த மா நிலத்தில் உள்ள கந்த்வான் என்ற பகுதியைச் சேர்ந்த முதுகலை படிக்கும் இஸ்லாமிய மாணவர் ஒருவர், இந்துப் பெண்ணிடம் பேசியதற்காக அவரை 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதுகுறித்து, போலீஸில் புகார் அளித்துள்ள  நிலையில், போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்துப் பெண்ணிடம் இஸ்லாமிய மாணவர் பேசியதற்காக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்