ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

செவ்வாய், 21 மார்ச் 2023 (16:20 IST)
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பங்குனி உத்திரத்திருநாள் ஏப்ரல் ஐந்தாம் தேதி கொண்டாடப்பட உள்ளத்தை அடுத்து திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் பொது தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாநில அரசு அலுவலர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவித்துள்ளார். 
 
மேற்கண்ட தேதியில் பொது தேர்வு இருந்தால் அந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் மற்ற மாணவர்களுக்கு விடுமுறை என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் ஐந்தாம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் ஆறாம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது 
 
அன்றைய தினம் உயர்கல்வி மாணவ மாணவியருக்கு மட்டும் வேலை நாள் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்