வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம்

செவ்வாய், 15 நவம்பர் 2022 (11:07 IST)
வங்க கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இதன் காரணமாக தமிழகம் புதுவையில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இதனால் தமிழக கடலோர பகுதியில் நவம்பர் 19ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்றும் 19ஆம் தேதி முதல் மழை தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே பெய்த கன மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் மிதந்து வரும் நிலையில் மீண்டுமொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்