பிரஸ் கிளப் போராட்டம் குறித்து அண்ணாமலை டுவிட்

செவ்வாய், 31 மே 2022 (11:22 IST)
அண்ணாமலையை கண்டித்து சென்னை பிரஸ் கிளப் போராட்டம் நடத்திய நிலையில் இந்த போராட்டம் குறித்து தனது டுவிட்டரில் அண்ணாமலை சில கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுப்பிய கேள்விகள் இதோ
 
என்னிடம் கேள்வி கேட்ட சகோதர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்தேன். அவரை வைத்து  அறிவாலயம் கட்சியிடம் நல்ல பெயர் எடுக்க ஆர்ப்பாட்டம் செய்து உள்ளனர்!
 
அதிக அளவில் செய்தியாளர்களை கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு தான் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினை திமுக வழங்கும் என எதிர்பார்கின்றேன். விமலேஷ்வரனா? பாரதி தமிழனா? அணிகள் கைப்பற்ற போவது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினை. அரசியல் விளையாட்டுக்களை பொறுத்திருந்து பார்ப்போம்
 
எனது பேச்சு நியாயம் என்று கருதி போராட்டத்தினை புறக்கணித்த உண்மை செய்தியாளர்களுக்கு மிக்க மிக்க நன்றிகள்! 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்