2026 தேர்தலுக்கு முன் ஜெய்ஸ்ரீ ராம், முருகனுக்கு அரோகரா என ஸ்டாலின் சொல்வார்: அண்ணாமலை

Mahendran

வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (10:40 IST)
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் முருகனுக்கு அரோகரா என சொல்வார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
தமிழக அமைச்சர் தற்போது ராமர் ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார், கடவுள் மறுப்பு கொள்கை என்பது இனி வேலைக்காகாது என்று அவர்களே முடிவு செய்து விட்டார்கள்.
 
பாஜகவின் நடவடிக்கை காரணமாக திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது, 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம், முருகனுக்கு அரோகரா என்று கூட சொல்வார் என்று கூறினார்.
 
தமிழக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும் தவறு செய்தவர்கள் மீண்டும் பொறுப்புக்கு வராத வகையில் தீர்ப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை செய்துவரும் தமிழக காவல்துறைக்கு எனது பாராட்டுக்கள் என்றும் யாராக இருந்தாலும் கைது செய்கிறார்கள் இது எனக்கு நம்பிக்கை தருகிறது என்றும் கூறினார்.
 
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்