அனைத்தும் டோர் டெலிவரி… மக்கள் மகிழ்ச்சி

திங்கள், 31 மே 2021 (15:54 IST)
தமிழகத்தில் மளிகைப் பொருட்களை மக்கள் இருப்பிடத்திற்கே சென்ரு வியாபரிகள் விற்பனை  செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில்,நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து இயங்கும் என தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும், மளிகைப் பொருட்களை ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள மளிகைக் கடைக்காரர்களால் வாகனங்களிலோ தள்ளுவண்டிகளிலோ உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விநியோகிக்கவும், ஆன்லைன் வாயிலாக வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருட்களை குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று வழங்கவும் காலை முதல் மாலை 6 மணிவரை அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்